• Monthlywise

    May 2024
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
  • for you

  • ஆத்மாவும் அதுபடும்பாடும்

    வெளியீடூ 4

ஆமர்பத்தை நோக்கி தொடர் -17

தொடர் 17

யார் இந்த இப்லீஸ் ?     எங்கிருந்து வந்தான் ?    எதற்காக வந்தான்?

இப்லீஸே ஸுஜூது  செய்பவர்களுடன் நீ ஆகாமல் இருப்பதற்கு உனக்கு என்ன வந்தது?

(குர்ஆன் 15:32)

“நான் உனக்குக் கட்டளையிட்ட பொழுது நீ ஸுஜூது செய்வதை விட்டும் உன்னை எது தடுத்தது என்று அவன் (அல்லாஹ்) கேட்டான்…

(குர்ஆன் 7:12)

அல்லாஹ்வின் இந்தக் கேள்வி அர்த்தமற்றதாகும். அவன் ஸுஜூது செய்யக் கூறியது மலக்குகளிடம் மட்டுமே. இப்லீஸிடம் ஆதமிற்கு ஸுஜூது செய்யக் கூறப்படவே இல்லை ஏனென்றால் அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவன்….

முழுமையாகப்படிக்க 17

ஆரம்பத்தை நோக்கி- தொடர் 13

திருக்குர்ஆன் இஸ்லாமிய நம்பிக்கைகளின் முதுகெலும்பு. அல்லாஹ்வின் உரையாடல் அல்லது கட்டளைகளின் எழுத்து வடிவமே குர்ஆன். அல்லாஹ்வின் வார்த்தைகளில் முரண்பாடு இருக்க முடியாது. அதாவது குர்ஆனில் முரண்பாடு இருக்க முடியாது என்பது முஸ்லீம்களின் வாதம். ஒரே ஒரு பிழை இருந்தாலும் இந்த குர்ஆன் நிச்சயமாக இறைவனின் வார்த்தைகள் அல்ல என்பதை எளிதாக கூறி விடலாம்.  குர்ஆனைப்பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்,…

தொடர்ந்து படிக்க

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 3

தொடர் -3

வழிபாடுகளில் கவனம் தேவையா?

 முகம்மதுநபி அவர்களின் மரணத்திற்குப்பின் சஹாபாக்களுக்குள் ஏற்பட்ட குழப்பத்தை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதை மறப்பதற்காக எனது சிந்தனையை வேறு வழியில் திருப்பினேன்.  இரத்தக்கறை படிந்த வரலாற்று செய்திகளை அறிந்த கொள்வதை முற்றிலும் நிறுத்தினேன். அரசியல் அதிகாரங்களுக்காக நடந்த படுகொலை வரலாற்றை படித்து வெறுப்படைவதற்கு பதிலாக, ஹதீஸ்களைப் பொருளுணர்ந்து படித்து மார்க்க அறிவைப் பெருக்கிக் கொள்வது என்று முடிவு செய்து கொண்டேன்.

தொடர்ந்து படிக்க

ஆரம்பத்தை நோக்கி -தொடர் 2

தொடர் -1

தொடர் -2

தேடலின் ஆரம்பம்

 72 கூட்டத்தினர் யார்?

முகம்மதுநபி அவர்களின் மரணத்திற்கு பிறகு நபித்தோழர்களுக்குள்

 ஏற்பட்ட குழப்பத்தை மிக விரிவாக கூறும் ஒரு சொற்பொழிவு WIN TV ல் கடந்த 2006 ஆம் ஆண்டு புனித ரமளானின் (சஹர்) அதிகாலை நேரத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அந்த சொற்

பொழிவின் ஆரம்பப் பகுதிகள் நபித்தோழர்களின் உயர்வான குணங்களையும்முகம்மதுநபி மீது நபித்தோழர்கள் வைத்திருந்த அன்பையும் விளக்கமாக கூறியது. அதிலிருந்து வரலாற்றைத் தெரிந்து கொள்ள நான் ஆவலானேன். எனது தேடலில்….

தொடர்ந்து படிக்க