Posted on May 25, 2011 by பறையோசை பதிப்பகம்
இசுலாம் ஒரு மதம் அல்ல; அது ஒரு மார்க்கம் என்றும், இசுலாம் ஒரு எளிய மார்க்கம் என்றும், இசுலாமியக் கொள்கைகள் மட்டுமே காலங்காலத்திற்கும் பொறுத்தமான வாழ்க்கைக்கு வழிமுறைகளைக் கொண்டுள்ளது; கடைபிடிக்க சிறந்தது என்றும் இசுலாமியர்கள் கூறுகின்றனர். இந்து, கிறித்துவ மதங்கள் போன்று இசுலாமும் ஒரு பிற்போக்கானதே என்பதை ஒரு நீண்ட தொடர்மூலம் விரிவாக விளக்குவதே இத் தொடர்.
இத் தொடர், இசுலாம் பற்றி அறியாதவர்களுக்கும் எளிமையாக, அதன் கொள்கைகள் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும் என்று நம்புகிறோம்.
வாசகர்கள் தங்கள் கருத்தை தவறாமல் பதிவு செய்யும்படியும் கேட்டுக் கொள்ளகிறோம். தங்களின் கருத்துப் பதிவுகள் எமக்கு இதனை மேலும் செழுமைப்படுத்திட பேருதவியாக இருக்கும் என்பதையும் சுட்டிட விழைகிறோம்.
தொடர் 1:
“எல்லா நல்ல மனிதர்களும் உலகத்திற்கு தகுந்தபடி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். சில முரண்பட்ட மனிதர்கள் மட்டுமே தங்களுக்கு ஏற்றபடி உலகத்தை மாற்றியமைப்பதில் சளைக்காமல் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தின் எல்லா வித முன்னேற்றங்களும் இப்படிப்பட்ட நபர்களையும் அவர்களின் புதுமைக் கண்ணோட்டத்தையும் தான் நம்பி இருக்கின்றன.”
–ஜார்ஜ் பெர்னார்ட் ஷா
துவங்கும் முன்…
ஹதீஸ்கள் பற்றி ஓர் சிறிய அறிமுகம்
என் சம்பந்தமாக எதையும் எழுதி வைக்காதீர்கள் என முகம்மதுநபி உத்தரவிட்டிருந்தார்கள் .
குர்ஆன் எழுதிப் பதிவு செய்யப்படும் சூழ்நிலையில் ஹதீஸும் எழுதப்பட்டால் எது குர்ஆன் வசனம்? எது முகம்மதுநபியின் பொன்மொழி? என்பதில் குழப்பம் நேர்ந்துவிட வாய்ப்புள்ளதால் இப்படி ஒரு உத்தரவை முகம்மதுநபி சொன்னார்கள். ஆகவே நபிகள் நாயகம் அவர்களது பொன்மொழிகளை அவரது தோழர்கள் எழுதிப் பதிவு செய்யவில்லை
ஆயினும் அபூஹூரைரா போன்ற ஓரிரு முகம்மதுநபியின் தோழர்கள் தங்களுக்கு அத்தகைய குழப்பம் ஏற்படாது என்று….
தொடர்ந்து படிக்க
Filed under: Uncategorized | Leave a comment »
Posted on April 5, 2011 by பறையோசை பதிப்பகம்
மதம் மனிதனை, அவனது போராட்ட உணர்வு வேகத்தை தடுத்து முடக்கிவிடுகிறது. அது தாழ்வுணர்ச்சியையும், கீழ்படியும் மனப்பான்மையையும் ஊட்டி வளர்க்கிறது. இறுதியில் இன்று நிலை கொண்டுள்ள அமைப்பு முறையை ஒப்புக்கொள்ளச் செய்கிறது. அதே சமத்தில் குறுகிய மனப்பான்மை படைத்த வெறியை உண்டாக்குகிறது. இதர கோட்பாட்டாளர்கள் மீது எவ்வித சகிப்பும் இல்லாமல் சாகும் குணத்தை அதாவது வேறு வெளிச்சத்தில் பார்ப்பவர்களைக் கண்டு சகிக்காத நிலையை உண்டாக்குகிறது.
இந்த சமய சார்பற்ற உலகியல் சார்பின் அஸ்திவாரத்திலேயே உள்ள முரண்பாடுகளில் இருந்துதான், சமுதாய பகைமைகளிலிருந்துதான் மதம் வெளிப்பட்டு தோன்றியது. எனவே மதத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்றால் இன்றைய நிலையிலுள்ள சமுதாயத்தை புரட்சிகரமாக மாற்றுவது ஒன்றே வழி.
Filed under: Uncategorized | Leave a comment »
Posted on April 1, 2011 by பறையோசை பதிப்பகம்
தமிழகம், கேரளம், மேற்கு வங்காளம், புதுவை மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. தலைவர்கள் யார்?, தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்றும் திடமான கொள்கைகளும் பிரச்சாரங்களும் நடைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு தலைவர் என்பவர் எப்படி இருப்பார்?
பொதுவுடமைப் பாதையில் உள்ள தலைவர்:
இவர், தன் தனிப்பட்ட நலன் என்பதும் சமூக மக்களின் நலத்துடன் பிணைக்கப்பட்டதொன்று என்பதை புரிந்துகொண்டு முதலில் ஒரு சமூகத் தொண்டனாக மக்களின் நலனுக்காக மக்களிடையே பணியாற்றுகிறார். அதன் வழியே தன்னுடன் பலரையும் இணைத்துக்கொண்டு பணியாற்ற முயற்சிக்கிறார். பிற தோழர்கள் மத்தியில் மக்களுக்கான பணியாற்றுவதில் சளைக்காமல் முதன்மையானவராக பணியாற்றுகிறார். அதன் வெற்றி
முழுமையாகப் படிக்க
Filed under: Uncategorized | Leave a comment »
Posted on March 8, 2010 by பறையோசை பதிப்பகம்
இந்த இடுக்கைக்கான முழுமையான பதிவுகளைக்காண
இங்கே சொடுக்கவும்
Filed under: Uncategorized | 4 Comments »
Posted on March 8, 2010 by பறையோசை பதிப்பகம்
சேலம் மாவட்டத்திலுள்ள 108 ஓட்டுனர்கள் வேலைநிறுதம்செய்துள்ள செய்தியை வெளியிட்டுள்ள தினமலர் நரித்தனமாக பொதுமக்களின் உணர்ச்சியை தூண்டும் வகையில் தவறான செய்தி ஒன்றையும் இணைத்துள்ளது. அப்பத்திரிக்கை ஒரு ஓட்டுனர், ஒரு உதவியாளர் தவிர 4 உதவியாளர்கள் உள்ளதாக வாந்தி எடுத்துள்ளது. ஒரு வண்டிக்கு ஒரு 12 மணிநேர ஷிஃப்ட்டுக்கு ஒரு ஓட்டுனரும் (Pilot) ஒரு EMT எனப்படும் மருத்துவ உதவியாளர் மட்டுமே.
தினமலர் செய்தியைக்காண இங்கே சொடுக்கவும் 07–03-2010 சேலம் மாவட்ட செய்
Filed under: Uncategorized | Leave a comment »